AudiobooksKalki TimesPonniyin SelvanTamil Audiobooks

Ponniyin Selvan Full Story in 6min Ponniyin Selvan Audiobook

Ponniyin Selvan Full Story in 6min Ponniyin Selvan Audiobook

Ponniyin Selvan Full Story in 6 mins Ponniyin Selvan Audio Book பொன்னியின் செல்வன் Kalki Times

Ponniyin Selvan Full Story in 6 mins

வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தமக்கைக்கும் , தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனை அனுப்புகிறார் . வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் போது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை ரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி , பிறகு செல்லும் வழியில் கடம்பூரில் தங்கும் போது சோழ சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான் . பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த கரிகாலரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியை காண பழையாறை செல்கிறான் . அங்கேயே இளைய பிராட்டியை சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருள்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் செல்கிறான்.

கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதாக கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள்.

இலங்கைலிருந்து திரும்பி வரும்போது, ​​அருள்மொழி வர்மன் ஒரு சூறாவளியில் சிக்கி காணாமல் போகிறார். அவர் இறந்துவிட்டார் என்று வதந்தி பரவுகிறது, ஆனால் அவர் தப்பிப்பிழைத்து ஒரு புத்த மடாலயமான சூடா மணி விஹாரத்தில் தங்கியிருக்கிறார். பின்னர் ஒரு நாள் திருப்பூரம்பயம் காட்டில் வந்தியத்தேவன் நந்தினியைப் பார்க்கிறான், பாண்டிய சதிகாரர்கள் ஒரு சிறு பையனை அரியணையில் அமர்த்தி அவன் முன் சபதம் எடுத்துக்கொள்கிறார்கள். பின்னர் மெதுவாக சிதறிய குடும்பம் ஒன்றுகூடத் தொடங்குகிறது.

இதற்கிடையில் நந்தினி, ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு அழைத்து, ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கிறார். வாழ்க்கை முற்றிலும் ஆபத்தில் உள்ளது என்று கரிகாலனுக்குத் தெரிந்தாலும், அவர் கடம்பூர் அரண்மனைக்குச் செல்கிறார். வந்தியத்தேவன் ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்க பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியத்தேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருகோவிலூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருத்தர், வைத்தியர் மகன் பினாகபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினாகபாணியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி, மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவர்த்தியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார். இளமை பருவத்தில், ஆதித்த கரிகாலர் நந்தினியைக் காதலித்து வந்தார், ஆனால் ஆதித்த கரிகாலர் வீரபாண்டியனைக் கொன்ற பிறகு அவள் சோழ வம்சத்தை அழிக்க முற்பட்டாள் .

இதற்கிடையில் சதிகாரர்கள் ஒரு நாள் தேர்வு செய்கிறார்கள். பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்ரவர்த்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றப்படுகின்றனர். சக்ரவர்த்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியத்தேவன் மேல் விழுகிறது.


அருள்மொழி வர்மன் தஞ்சைக்குத் திரும்புகிறார். பெரிய பழுவேட்டரையர் தான் தாம் ஆதித்த கரிகாலனை கொன்றேன் என்று ஒப்புக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். வந்தியத்தேவனை கந்தமாறன் கொன்றான் என்பதை கேட்ட மணிமேகலை பித்து பிடித்து போனால். பின்னர் அவளும் இறந்து போனாள். இதற்கிடையில் அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அங்கு அவர் மகுடத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டார், ஆரம்பத்தில் கிரீடத்தைப் பெற அவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர், அவர் அனைவரையும் ஏமாற்றி தனது சிற்றப்பன் உத்தம சோழனிடம் மகுடம் சூட்டுகிறார்.

Ponniyin Selvan Popular Tags:

ponniyin selvan,ponniyin selvan movie,ponniyin selvan book,ponniyin selvan characters,ponniyin selvan tamil pdf,ponniyin selvan audio book,ponniyin selvan book pdf,ponniyin selvan english,ponniyin selvan release date,ponniyin selvan english pdf,ponniyin selvan cast and roles,ponniyin selvan family tree,ponniyin selvan book in english,ponniyin selvan trailer

raja raja cholan history in tamil,raja raja cholan history,raja raja cholan story in tamil,raja raja cholan story,raja raja cholan story in tamil animated,raja raja cholan story book,raja raja chola story ,raja raja cholan true story ,son of ponni,ponniyin selvan audio,ponniyin selvan audio book,ponniyin selvan audio book part 5,ponniyin selvan audio book part 4,ponniyin selvan audio book part 3,ponniyin selvan audio book part 2,ponniyin selvan audio book part 1,ponniyin selvan audio story in tamil,ponniyin selvan audio story,ponniyin selvan complete story,ponniyin selvan short version,ponniyin selvan short story,ponniyin selvan short summary in tamil,ponniyin selvan short summary,ponniyin selvan summary in tamil,ponniyin selvan summary,

ponniyin selvan story in tamil,ponniyin selvan,ponniyin selvan audio book,ponniyin selvan movie in tamil,ponniyin selvan full movie in tamil,ponniyin selvan part 2,ponniyin selvan cast and crew,ponniyin selvan story,ponniyin selvan audio book full,ponniyin selvan audio story in tamil,

ponniyin selvan full story,ponniyin selvan audio,ponniyin selvan audio book,ponniyin selvan audio book full,ponniyin selvan story,ponniyin selvan audio story in tamil,ponniyin selvan audio story,ponniyin selvan complete story,ponniyin selvan short version,ponniyin selvan short story,ponniyin selvan short summary in tamil,ponniyin selvan short summary,ponniyin selvan summary in tamil,ponniyin selvan summary,ponniyin selvan audio book part 5,ponniyin selvan audio book part 4,ponniyin selvan audio book part 3,ponniyin selvan audio book part 2,ponniyin selvan audio book part 1,kalki times,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *